» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை வெளியீடு: ஜூன் மாதம் 9-ஆம் குரூப்-4 தேர்வு!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 3:18:04 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9-ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ஆம் தேதியும், 2,030 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும் நிறைவடைந்துவிட்டது.

இந்த நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory