» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சீமான் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேட்டி!
வெள்ளி 12, ஜூலை 2024 1:05:42 PM (IST)
கலைஞர் பற்றி அரை வேக்காட்டுத் தனமாக பேசும் சீமானின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். இளைஞர்களுக்காக கல்விக்கடன் ரத்து, கணினி வழங்கும் திட்டம், முதல் பட்டதாரி திட்டம் உட்பட பல திட்டங்களை தந்தவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர். அவரை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
நாம் தமிழர் கட்சியினர் கலைஞரை அவதூறாக பேசுவதை கண்டிக்காமல் சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைவருக்குரிய பண்பு இல்லை. கலைஞரின் மறைவின் போது அவரை புகழ்ந்து பேசியவர் தற்போது மாற்றி பேசுகிறார். தமிழக முதல்வர், கழகத் தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எங்கள் கட்சியினர் பொறுமையாக உள்ளனர். அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் கூறும்போது நாங்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.
தற்போது சாதி ரீதியாக பேசியதாக துரை முருகன் மீது அருண் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமான் காெள்கை இல்லாதவர். வாய்க்கு வந்ததை பேசுகிறார். சட்டம் ஒழுங்கில் பிர்சசனை ஏற்படுத்த முயன்று வருகிறார். ஏற்கனவே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறியவர். ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்களை சாதிரீ ரியாக இழிவு படுத்தி அவதூறாக பேசியவர்.
அரை வேக்காட்டுத் தனமாக தினமும் ஒரு கருத்துக்களை தெரிவிக்கிறார். அவரது மனநிலையை சோதிக்க வேண்டும். சவுக்கு சங்கர், பெலிக்ஸ் கைது குறித்து கேள்வி கேட்கிறார். பெண் காவலர்கள் புகார் மீது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதை அவர் ஆதரிக்கிறாரா? கருத்துரிமை பறிக்கப்படுவதாக பேசுகிறார்.
தனிப்பட்ட முறையில் தவறாக பேசுவதை ஏற்க முடியாது. அவர் தவறான தகவல்களை தெரிவித்து தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார். இலங்கை தமிழர் பிரச்சனையை முன்நிறுத்தி உலக அளவில் அவர் நிதி பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜபக்சேவை போல திமுகவையும், அதன் தலைவர்களையும் தமிழர்களின் விரோதியாக சித்தரித்து அவதூறாக பேசி வருகிறார். சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
திமுக குசு குமாரன் அவர்களுக்குJul 12, 2024 - 07:56:37 PM | Posted IP 162.1*****
அது எப்படி தமிழினத் தலைவர்? பிறந்த ஊரு ஓங்கோல், அந்திராவில் அதுக்கு பெயர் தமிழின தலைவராம். 🤣🤣🤣
திமுக சு குமரன்Jul 12, 2024 - 07:01:13 PM | Posted IP 172.7*****
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை அவதூறாக பேசிய சீமான் அவர்களுக்கு எங்கள் முத்தையா வரும் பகுதியின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்... என்றும் எங்கள் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில்... முத்தையாபுரம் பகுதி திமுக.🏴🚩🙏
தமிழ்ச்செல்வன்Jul 12, 2024 - 06:00:26 PM | Posted IP 172.7*****
கருணாநிதியைப் பற்றி.... பெரியார் பேசாத பேச்சா?
கண்ணதாசன் பேசாத பேச்சா?
எம்ஜிஆர் பேசாத பேச்சா?
ஜெயலலிதா பேசாத பேச்சா?
நாஞ்சில் சம்பத் பேசாத பேச்சா?
நாஞ்சில் மனோகரன் பேசாத பேச்சா?
தீப்பொறி ஆறுமுகம் கொஞ்சநாள் ஆதீமூக்காவுல இருந்து எம்ஜிஆர் பேசாத பேச்சா?
வைகோ பேசாத பேச்சா?
இப்ப சீமான் பேசுனா மட்டும் இடிக்குதோ?
சரி.... பதவியை காப்பாத்த நீங்க இப்படி பேசித்தானே ஆகணும்...
தமிழர் தலைமைJul 12, 2024 - 05:21:01 PM | Posted IP 162.1*****
வழக்கம்போல திராவிடம் ஜாதிக்கு எதிராக ஜாதியை தூண்டி விடுகிறது. சீமானும் நாடார் கீதா ஜீவனும் நாடார். இதுதான் திராவிட சூட்சி. தமிழர் ஜாதிகளை தங்கள் ஜாதிக்குள்ளே பிரித்து ஆள்வது.
தேச பக்தன் காமராஜர் பக்தர் ஒருவன்Jul 12, 2024 - 02:56:13 PM | Posted IP 162.1*****
கருணாநிதி நம் தலைவர் கல்வித்தந்தை காமராஜரை எதிராக பேசினார் தெரியுமா ?
அண்டங்காக்கா, காண்டாமிருகத் தோழர் , மரமேறி , பனையேறி ,.. என்று ஒருமையில் வசைபாடியது என்பது எல்லோருக்கும் தெரியும். கடவுளுக்கே தெரியும்.
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு விதித்த தடை நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஜூலை 2025 4:27:01 PM (IST)

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!
வியாழன் 10, ஜூலை 2025 12:08:58 PM (IST)

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கரில் கைது
வியாழன் 10, ஜூலை 2025 12:03:53 PM (IST)

தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-ம் தேதி தேர்வு: டிஆர்பி அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 11:44:41 AM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

என்னமா இப்படி பண்றீங்களேJul 13, 2024 - 11:27:51 AM | Posted IP 172.7*****