» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின் இணைப்பு இல்லாத வி.ஏ.ஓ அலுவலகம்: தூத்துக்குடியில் அவலம்!!
புதன் 31, ஜூலை 2024 3:03:38 PM (IST)

தூத்துக்குடியில் அய்யனடைப்பு வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே அய்யனடைப்பு கிராமம் உள்ளது. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 6 மாத காலமாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது. தனி இணைப்பு இல்லாததால் அருகில் உள்ள ரேஷன் கடையில் இருந்து மின் சப்ளை வந்துள்ளது. அதனை மின் மின்வாரிய அலுவலர்கள் துண்டித்து விட்டனர்.
கிராமங்களை காக்க வேண்டிய நிர்வாக அலுவலகத்திலேயே மின் இணைப்பு இல்லாமல் இப்படியொரு நிலை என்றால் கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய வேண்டிய அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு எப்படிச் சென்றடையும். எனவே மாவட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 9:26:14 PM (IST)

போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்
சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)

மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது: மத்திய அரசை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!
சனி 14, ஜூன் 2025 4:54:52 PM (IST)

பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சனி 14, ஜூன் 2025 4:04:48 PM (IST)
