» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சேவைக் குறைபாடு: அரசு போக்குவரத்து கழகம் ரூ.10,149 இழப்பீடு வழங்க உத்தரவு!
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 5:54:51 PM (IST)
சேவைக் குறைபாடு காரணமாக அரசு போக்குவரத்து கழகம் 10,149 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி கதிர்வேல்நகர் மேற்கு பகுதியைச் சார்ந்த சதீஸ்குமார் என்பவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு அரசுப்பேருந்தில் பயணம் செய்தார். அப்போது 51 ரூபாய் பயணச்சீட்டிற்கு ரூபாய் 200 நடத்துனரிடம் கொடுத்து விட்டு மீதி பாக்கித் தொகை ரூபாய் 149 ஐ கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தற்போது தன்னிடம் சில்லறை இல்லை எனவும், சிறிது நேரம் கழித்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். பின்பு புகார்தாரர் ஆலங்குளம் வந்தவுடன் பாக்கித் தொகையை கேட்டுள்ளார்.
அப்போதும் நடத்துனர் பாக்கித் தொகையை கொடுக்காமல் கால தாமதம் ஆக்கி வந்துள்ளார். அதன் பின்னர் புகார்தாரர் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதால் அப்போதும் பாக்கித் தொகையை கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தரக்குறைவாக பேசி அவரை இறக்கி விட்டு விட்டார். இதனால் புகார்தாரர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாருக்கு முறையான பதில் அளிக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதீஸ்குமார் பின்பு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பாக்கித் தொகை ரூபாய் 149, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 5,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 10,149 ஐ வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
திங்கள் 12, மே 2025 8:58:45 AM (IST)

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)
