» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடந்த 6 மாதங்களில் 15 லஞ்ச வழக்குகள் பதிவு : 8 பேர் கைது!

புதன் 2, ஜூலை 2025 8:39:59 AM (IST)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 15 வழக்குகள் பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் பொது நிர்வாகத்தில் உள்ள ஊழலை கண்டறிந்து விசாரித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையை சேர்ந்த போலீசார், அரசு பணிகளில் முறைகேடுகளை தடுத்தும், ஊழலில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்று கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் சுமார் 15 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதன்படி தூத்துக்குடியில் அதிகபட்சமாக 6 வழக்குகளும், தென்காசியில் 5, நெல்லையில் 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் தென்காசியில் அதிகபட்சமாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. லஞ்சப் புகாரில் சைபர் கிரைம் துணை கண்காணிப்பாளர், ஒரு இன்ஸ்பெக்டர், தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த 2 பேர் என 4 போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory