» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார்: இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 10, ஆகஸ்ட் 2024 11:20:28 AM (IST)
கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார் எழுந்ததால் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
குமரி மாட்டத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் மற்றும் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை சிலர் மலிவான விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதனை கொல்லங்கோடு உள்பட எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தாமஸ், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பல்வேறு புகார் வந்தது. இதுதொடர்பாக ரகசியமாக கண்காணிக்க எஸ்பி சுந்தரவதனம், சில போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமன்னம் பகுதியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 350 லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் தாமஸ் அந்த மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே வேறொரு கும்பல் அந்த மண்எண்ணெய்யை திருடி சென்று விற்பனை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டரை கண்காணித்து வந்த ரகசிய போலீசார் இந்தசம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆதாரத்துடன் எஸ்பிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமசை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட விவகாரம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2026 தேர்தல் தமிழக மக்களுக்கு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும்: பிரேமலதாவிஜயகாந்த்
ஞாயிறு 25, ஜனவரி 2026 2:12:30 PM (IST)

தீய சக்தி திமுக, ஊழல் சக்தி அதிமுக இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது : விஜய் பேச்சு
ஞாயிறு 25, ஜனவரி 2026 2:07:46 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு
சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
சனி 24, ஜனவரி 2026 4:41:51 PM (IST)

இந்தியை திணித்து தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ்: சீமான் குற்றச்சாட்டு
சனி 24, ஜனவரி 2026 3:59:25 PM (IST)

மழைநீர் வடிகால்வாயில் கொசுவலை போர்த்தியது ஏன்? - மேயர் பிரியா விளக்கம்
சனி 24, ஜனவரி 2026 3:32:33 PM (IST)

