» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார்: இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 10, ஆகஸ்ட் 2024 11:20:28 AM (IST)
கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார் எழுந்ததால் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
குமரி மாட்டத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் மற்றும் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை சிலர் மலிவான விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதனை கொல்லங்கோடு உள்பட எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தாமஸ், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பல்வேறு புகார் வந்தது. இதுதொடர்பாக ரகசியமாக கண்காணிக்க எஸ்பி சுந்தரவதனம், சில போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமன்னம் பகுதியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 350 லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் தாமஸ் அந்த மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே வேறொரு கும்பல் அந்த மண்எண்ணெய்யை திருடி சென்று விற்பனை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டரை கண்காணித்து வந்த ரகசிய போலீசார் இந்தசம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆதாரத்துடன் எஸ்பிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமசை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட விவகாரம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)
