» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 12:08:26 PM (IST)
மேட்டூர் அருகே கால்பந்து போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று கூறி மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் முதல் பாதியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சரிவர விளையாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில்அமர வைத்து கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.
அப்போது, பள்ளி ஆசிரியர்களும் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர்.2-ம் பாதியில் சிறப்பாக ஆடினர்: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், இறுதிப் போட்டியில் 2-ம் பாதியில் சிறப்பாக ஆடி கொளத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை தாக்கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)
