» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:41:10 PM (IST)
"தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உடனடியாக, அவர்களை விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும்.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் ஜி. பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் கு.சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் டிவி சசிக்குமார், மற்றும் பாஜகவினர் பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசு.
அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு. திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணை செல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டா வழங்காமல் அலைக்கழித்த தாசில்தாருக்கு அபராதம் : நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 8:38:02 AM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் விழுந்த கன்றுக்குட்டி : தாய்ப்பசு பாசப் போராட்டம்!!
வெள்ளி 27, ஜூன் 2025 8:34:47 AM (IST)

முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு : தூத்துக்குடி இல்லத்திற்கு முதியவர்கள் மாற்றம்
வியாழன் 26, ஜூன் 2025 5:53:08 PM (IST)

அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்!!
வியாழன் 26, ஜூன் 2025 4:37:37 PM (IST)

போதைப் பொருள் வழக்கு : நடிகர் கிருஷ்ணா கைது!!
வியாழன் 26, ஜூன் 2025 3:59:27 PM (IST)

போதையில்லா இளைய சமுதாயம் உருவாக்குவோம் : அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்!
வியாழன் 26, ஜூன் 2025 3:40:32 PM (IST)
