» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை : பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:04:03 AM (IST)
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடியில் கோவில், கிறிஸ்தவ ஆலயம், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், ரயில், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், இப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாம் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில், வைகுண்டபதி பெருமாள் கோவில், பனிமயமாதா ஆலயம், ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். மேலும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:24:44 PM (IST)

கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)

புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி உயர் ரக போதைப்பொருள் சிக்கியது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:59:09 AM (IST)

பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை: எ.வ.வேலு
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:45:33 AM (IST)

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:24:55 AM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:24:50 AM (IST)




