» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை : பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:04:03 AM (IST)
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடியில் கோவில், கிறிஸ்தவ ஆலயம், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், ரயில், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், இப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாம் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில், வைகுண்டபதி பெருமாள் கோவில், பனிமயமாதா ஆலயம், ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். மேலும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோசடி ஆவணப் பதிவுகளை தடுக்க நடவடிக்கை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை
புதன் 15, அக்டோபர் 2025 10:38:37 AM (IST)

நாலுமாவடியில் ரூ.30 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை: மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்
புதன் 15, அக்டோபர் 2025 10:10:54 AM (IST)

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவை நியமிக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கெடு
புதன் 15, அக்டோபர் 2025 8:43:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.750 கோடியில் காற்றாலை முனையம் : வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 8:34:13 AM (IST)

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 9:36:55 PM (IST)

கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:00:18 PM (IST)
