» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் : அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
செவ்வாய் 20, மே 2025 3:37:24 PM (IST)
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வு இல்லை; அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்று மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், வீட்டு மின் நுகா்வோா், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோா் என பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்கட்டணமும் உயா்ந்தது. இதைத்தொடா்ந்து, 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில்தான், நிகழாண்டு ஜூலை மாதமும் மின் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டது.
இதனால், தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த சில நாள்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும் தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க கோரி தமிழக அரசு வழக்கு
புதன் 21, மே 2025 11:51:53 AM (IST)

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
புதன் 21, மே 2025 11:32:05 AM (IST)

பாலியல் புகார் எதிரொலி: திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்!
புதன் 21, மே 2025 11:22:57 AM (IST)

ஐ.டி நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, பணம் கொள்ளை : நேபாள தம்பதி கைது
புதன் 21, மே 2025 10:32:04 AM (IST)

சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்க மத்திய அரசு மானியம் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 20, மே 2025 5:46:45 PM (IST)

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.62 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
செவ்வாய் 20, மே 2025 4:19:46 PM (IST)
