» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரம் : ஆணையத் தலைவர் பெருமிதம்
சனி 31, மே 2025 4:51:36 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வளர்ச்சி திட்டங்களை விரைவாக மற்றும் திறமையாக செயல்படுத்துவதில் தேசிய அளவில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது என்று ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறினார்..
தென்னிந்தியாவின் வர்த்தக இயந்திரமாகத் திகழ்கிற வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், இந்த நிதியாண்டில் 50 மில்லியன டன் சரக்குகளையும், 1 மில்லியன் டிஇயு சரக்குபெட்டகங்களையும் கையாளும் இலக்குடன், சரக்கு கையாளுதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இலக்கை அடையும் நோக்கத்தில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக தேவைகளை துறைமுகத்தின் மூலம் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வேகமாக செயல்படுத்தி செயல்பட்டு வருகின்றது.
பாரத பிரதமரின் கதி சக்தி திட்டம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இந்தியா தொலைநோக்கு பார்வை 2030 ஆகிய முயற்சிகளுடன் ஒருங்கிணைந்து துறைமுகம் திட்டங்களை விரைவாக மற்றும் திறமையாக செயல்படுத்துவதில் தேசிய அளவில் தன்னை ஒரு மாதிரியாக நிலை நிறுத்தி வருகிறது.
இதன் மூலம் துறைமுகத்தினால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கடந்த வருடத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முக்கியமான மேம்பாட்டுப் பணித்திட்டங்களை மேற்கொண்டு, தனது சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தியுள்ளது. அவைகளுள் 2024-ஆம ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 7 லட்சம் டிஇயு-க்களைக் கையாளும் திறனையுடைய ஒரு புதிய சரக்குபெட்டக முனையத்தை அமைத்தல், 7 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனையுடைய பொது சரக்குகளை கையாளும் முனையத்தை அமைத்தல், 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட் உள்துறைமுகத்தில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையினை ஆழப்படுத்தி விரிவர்க்கும் பணிகள், வடக்கு சரக்கு தளம்-3 (NCB-3)-ஐ ஆழப்படுத்தும் பணிகள் போன்றவை அடங்கும்.
மேலும், 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சரக்குத் தளம்-7-ஐ பலதரப்பட்ட சரக்குகளைக் கையாளும் சரக்கு தளமாக அமைத்தல், 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில, சரக்குத்தளம் பயன்பாடில்லாத நேரங்களில, கப்பல் தளத்தினை பயன்படுத்துவதற்காக அதைத் திறமையாகக் கையாளுவதற்கென்று இணைப்பு கன்வேயர் அமைப்பை நிறுவுதல், 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி சரக்குப்பெட்டகங்களுக்காக நேரடி துறைமுக நுழைவு வசதி அமைத்தல் போன்ற திட்டங்களும் துறைமுகத்தின் முக்கிய மேம்பாடுகளில் அடங்கும்.
மேலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்ப செயல்முறை ஆலையைத் துவங்கியதின் மூலம் பசுமை ஆற்றல் மாற்றத்தைத் தழுவிய நாட்டின் முதல் இந்திய துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் விளங்குகிறது. துறைமுகம, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா திட்டங்களுக்காக 501 ஏக்கர் நிலத்தை ஓதுக்க, அதன் மூலம் ரூ.41,860 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது குறிப்பித்தக்கது.
தூத்துக்குடியின் சுற்றுவட்டாரங்களில் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் வகையில் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான வின்பாஸ்ட், சூரிய மின் பலகைகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான விக்ரம் சோலார் மற்றும் டாடா சோலார், தூத்துக்குடி தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் மரச்சாமான்கள் பூங்காவில் அமைந்துள்ள மரச்சாமான்கள் தொழிற்சாலை, காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள் தொழிற்சாலை, வரவிருக்கும் கப்பல் கட்டும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வாகன உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்றவைகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களையும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் உள்துறைமுக சரக்கு கையாளும் தளங்களை 14.20 மீட்டராக ஆழப்படுத்தி பலப்படுத்தும் திட்டங்கள் நடைபெறவுள்ளன. மேலும், 400 மீட்டர் நீளம் கொண்ட வடக்குசரக்கு தளம் -4-ஐ அமைத்து, அத்தளத்தை தரைதள காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை கையாளுவதற்கு வசதியாக அமைக்கப்படவிருக்கும் முனையத்திற்காக பயன்படுத்தப்படுத்துதல் மற்றும் பலதரப்பட்ட சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக அமைக்கப்படவிருக்கும் சரக்கு தளம் 10 போன்ற திட்டங்கள் அனைத்தும் துறைமுகத்தின் பொது சரக்குகளைக் கையாளும் திறனை அதிகரிக்கும்.
மேலும் துறைமுகத்தினுள் வரும் பனமாக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்கள் மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக துறைமுக நுழைவு வாயிலை அகலப்படுத்தும் பணி, கப்பல் வரும் வழித்தடத்தினை ஆழப்படுத்தும் பணி ஆகிய பணிகள் நடைபெற உள்ளன. கிழக்கிந்திய கடற்கரையில, ஒரு பிரத்தியேகமான கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுது பார்த்தல் வசதியைக வ.உ.சிதம்பரனார் துறைமுகப்பகுதியில் ஏற்படுத்தும் பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிழக்கிந்திய துறைமுகங்களுள் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழுமையான கடற்சார் வர்த்தக மையமாக திகழும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குபெட்டக போக்குவரத்தின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு வெளிதுறைமுக திட்டத்திற்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 4 மில்லியன் டிஇயு சரக்குபெட்டகங்களை கையாளும் திறனையுடைய 2 சரக்குப்பெட்டக முனையங்களையுக் கொண்ட இத்திட்டம்,, 1 கிலோ மீட்டர் நீளமும் 16.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டதாக இருக்கும்.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தனது செய்தி குறிப்பில், தூத்துக்குடியின் எல்லா காலநிலைகளையும் தாங்கும் சுற்றுச்சூழல் அமைப்பும், கட்டுமானப் பொருட்கள் எளிதாக கிடைத்தலும், சிறந்த பணி கலாச்சாரமும, சரியான திட்டமிடுதலும், இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலும், துறைமுகத்தினுள் உள்ள துறைகளுக்கு இடையே உள்ள சிற்ப்பான ஒருங்கிணைப்பும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று கூறினார்.
மேலும, துறைமுகம், துறைமுக உபயோகிப்பாளர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி, துறைமுக மேம்பாட்டுத் தேவைகளை மதிப்பீடு செய்கிறது என்றும் பணித்திட்டங்களின் வளர்ச்சியினை கண்காணிக்க கட்டமைக்கப்பட்ட அமைப்புகளை துறைமுகம் உருவாக்குகிறது என்றும் கூறினார்.
மேற்கண்ட இந்த அனைத்து முயற்சிகளும, முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாகவும், திட்டமிட்ட விதமாகவும் செயல்படுத்துவதற்கு ஒரு தளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் துறைமுகத்தினால் இந்தியாவின் கடல்சார் வர்த்தக வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்கினை அடைதலுக்கு பங்களிக்க முடியும் என்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)

தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா : முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
திங்கள் 2, ஜூன் 2025 12:10:55 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி நினைவு நாள்: ஆட்சியர் அழகுமீனா மரியாதை!
திங்கள் 2, ஜூன் 2025 12:02:04 PM (IST)

சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: டியூஜே தலைவர் சுபாஷ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 11:36:48 AM (IST)

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!
திங்கள் 2, ஜூன் 2025 11:31:56 AM (IST)

அது யாருக்கு வளர்ச்சிமே 31, 2025 - 08:40:43 PM | Posted IP 104.2*****