» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: டியூஜே தலைவர் சுபாஷ் வலியுறுத்தல்!

திங்கள் 2, ஜூன் 2025 11:36:48 AM (IST)

சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு பாதுகாப்பு தரவில்லை என்றால், தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை அரசின் ஒரு லட்சம் கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட இயற்கை வளங்களைக் கொள்ளையடித்த சமூக விரோதிகளை நீதிமன்றம் முன்பு நிறுத்திய நேர்மையின் அடையாளம் ஐயா உ.சகாயம் அவர்களுக்கு நாங்கள் அனைவரும் துணையாக இருப்போம்!

இந்த மண்ணைப் பற்றியும், மக்களைப் பற்றியும், கொஞ்சம் கூட கவலைப்படாத ஆட்சியாளர்கள், சமூக விரோதிகளையும், களிம வளக் கொள்ளையர்களையும் பாதுகாக்க துடிக்கும் ஊழல் நிறைந்த அரசால், சகாயம் அவர்களை எப்படி பாதுகாக்க முடியும்? அன்று அரசியலில் ஒரு காமராசர் போல, இன்று அதிகாரிகளில் ஒழுவராக சகாயம் அவர்கள் இருந்து வருகிறார்!

அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றால், நாம் அனைவருமே அவருக்கு பாதுகாப்பு! சகாயம் அவர்களை நாம் பாதுகாத்தால், அவர் மண்ணும் மலைகளையும் பாதுகாப்பார், நம் இயற்கை நம் சந்த்திகளை வாழ வைக்கும்! சகாயம் அவர்கள் தமிழகத்தின் சொத்து!தமிழக அரசு அவருக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து நேர்மையாக அதிகாரிகளையும், சமூக போராளிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்! இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

இ பிரேம்குமார் துணைச் செயலாளர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செங்கல்பட்டு மாவட்டம்Jun 2, 2025 - 01:27:57 PM | Posted IP 172.7*****

சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இது போன்ற நிகழ்வுகளுக்கு முன் நின்று குரல் கொடுத்து அரசின் முன் நல்ல நீதியை வழங்க போராடும் அனைவருக்கும் நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory