» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொறியியல் படிக்க முடியாதால் விரக்தி: மாணவி விஷம் குடித்து தற்கொலை!

சனி 7, ஜூன் 2025 8:58:20 AM (IST)

கயத்தாறு அருகே விரும்பிய மேல்படிப்பு படிக்க முடியாததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவாலப்பேரி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணபதி. விவசாயியான இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2-வது மகள் சுதா (17). இவர் பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்புக்காக காத்திருந்தார். சுதா பொறியியல் படிக்க ஆசைப்பட்டார். 

ஆனால் அவரது குடும்பத்தினர் ஏதாவது ஒரு டிகிரி படி என கூறியுள்ளனர். அவரது தோழிகள் பொறியியல் படிக்க விண்ணப்பித்திருந்தனர். இதனால் மனமுடைந்த சுதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கினார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory