» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை : இந்து முன்னணி கோரிக்கை!

சனி 7, ஜூன் 2025 4:06:44 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இத்திருக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  இத்திருக்கோவிலில் வருகின்ற 07.07.2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

அன்றைய தினம் தூத்துக்குடி பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் முன்கூட்டியே திட்டமிட்டு விபத்துகள் எதுவும் நடக்காமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆங்காங்கே தற்காலிக CCTV கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory