» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு: செந்தில் பாலாஜி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 12:41:33 PM (IST)
மின்மாற்றிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் அரசுக்கு ரூ.397 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் தரப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளி்க்கும் வகையில் அவருக்கு நோட்டீஸ் பிறப்பி்த்த நீதிபதி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 9:26:14 PM (IST)

போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்
சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)

மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது: மத்திய அரசை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!
சனி 14, ஜூன் 2025 4:54:52 PM (IST)

பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சனி 14, ஜூன் 2025 4:04:48 PM (IST)
