» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஏடிஜிபி ஆய்வு
சனி 21, ஜூன் 2025 8:32:35 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 1இல் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, கோயிலை காவல் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் நேற்று பார்வையிட்டு, கோயிலில் விமான தளம், யாக சாலை மண்டபம், பக்தர்கள் தரிசன வரிசை, வாகன நிறுத்தங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடன் ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆய்வின் போது தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந் சின்ஹா, டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி , தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண், திருச்செந்தூர் டிஎஸ்பி குருவெங்கட்ராஜ§, ஆய்வாளர்கள் கனகராஜன், இன்னோஸ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)

கடந்த 6 மாதங்களில் 15 லஞ்ச வழக்குகள் பதிவு : 8 பேர் கைது!
புதன் 2, ஜூலை 2025 8:39:59 AM (IST)
