» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பணம் வசூலித்த எஸ்.ஐ., 2 போலீசார் சஸ்பெண்ட் : பெண் போலீஸ் உள்பட 7 பேர் இடமாற்றம்!!

வியாழன் 26, ஜூன் 2025 9:01:06 AM (IST)



ஜிபே' மூலம் பணம் வசூலித்த புகாரை தொடர்ந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண் போலீஸ் உள்பட 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் வழியாக ஏராளமான லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மார்த்தாண்டம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மார்த்தாண்டம் வழியாக உரிய அனுமதி சீட்டு இல்லாமலும், அதிக பாரத்துடனும் கனிமவளம் ஏற்றிக்கொண்டு கேரளா செல்லும் லாரி டிரைவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தன. அதிலும் கையில் பணம் இல்லை என்று கூறும் டிரைவர்களிடம், ‘ஜிபே' மூலம் பணம் அனுப்பும்படி அடாவடி வசூலிலும் இறங்கியதாக கூறப்படுகிறது.

இந்த புகார் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டானின் நேரடி கவனத்துக்கு சென்றது. அவர் நேரடி விசாரணையில் இறங்கினார். அப்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஸ்டாலின், ஏட்டு சாலமன், போலீஸ்காரர் சிபு ஆகியோர் பணம் வாங்கிக்கொண்டு லாரிகளை அனுப்பிவைத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடமையை செய்ய தவறியதாகவும், பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பணம் பெற்றதாகவும் கூறி சம்பந்தப்பட்ட 3 போலீசாரையும் பணி இடைநீக்கம் செய்து சூப்பிரண்டு ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேபோல் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 3 பேர் ஜல்லி, மணல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 3 பேரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.மேலும் புதுக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் மற்றும் 3 பேர் மீது இதுபோன்ற புகார்கள் எழுந்ததால், அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டின் இந்த அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட போலீசார் மத்தியில் ‘கிலியை' ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory