» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு பதவி வெறி: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!!
வியாழன் 26, ஜூன் 2025 12:13:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன. இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா..?
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவுக்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா..?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு : தூத்துக்குடி இல்லத்திற்கு முதியவர்கள் மாற்றம்
வியாழன் 26, ஜூன் 2025 5:53:08 PM (IST)

அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்!!
வியாழன் 26, ஜூன் 2025 4:37:37 PM (IST)

போதைப் பொருள் வழக்கு : நடிகர் கிருஷ்ணா கைது!!
வியாழன் 26, ஜூன் 2025 3:59:27 PM (IST)

போதையில்லா இளைய சமுதாயம் உருவாக்குவோம் : அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்!
வியாழன் 26, ஜூன் 2025 3:40:32 PM (IST)

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இ.பி.எஸ். உத்தரவு
வியாழன் 26, ஜூன் 2025 12:54:37 PM (IST)

மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 26, ஜூன் 2025 12:42:54 PM (IST)
