» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது.

இதனால் அதிமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 7 ம் தேதி முதல் அவர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கான பாதுகாப்பு திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இசட் பிளஸ் என்பது நம் நாட்டின் 2வது உயர்ரக பாதுகாப்பாகும். பிரதமர் மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மோடிக்கு அடுத்தப்படியாக உள்ள உயர்ரக பாதுகாப்பு தான் இசட் பிளஸ் பாதுகாப்பாகும். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் 12 கமாண்டோக்கள், 52 காவலர்கள் வரை இடம்பெறுவார்கள். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory