» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்

வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)



இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத் துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பழமை மாறமால் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் இரணியலில் பகுதியில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பில் பழைமை மாறமால் புதுப்பித்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இரணியல் அரண்மனையில் பழுதுபட்ட மின் இணைப்புகளை மாற்றி புதிய மின் இணைப்பு வேலைகள், பழுது பார்த்தல், பராமரிப்பு வேலைகள், சுவர் பழுதுபட்டுள்ளதனை மாற்றி திரும்ப கட்டுதல் பணி, மர சீலிங் வேலைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory