» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் தங்கரதம் புறப்பாடு 4ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:19:50 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற 4ஆம் தேதி முதல் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் சு.ஞானசேகரன், வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் மாலை 06.00 மணியளவில் தங்கரதம் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.
இத்திருக்கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் பகுதியாக கிரிபிரகார தரைதளம் பணிகள் நடைபெற்று வந்ததால், 17.07.2024 முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் 04.09.2025 ஆம் தேதி முதல் முன் வழக்கபடியும் பக்தர்கள் விருப்பம் மற்றும் நலன் கருதியும் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)

புதிய கல்குவாரிக்கு அனுமதி அளிக்க எதிர்ப்பு : இருதரப்பினர் வாக்குவாதம்!
புதன் 17, செப்டம்பர் 2025 8:24:51 AM (IST)

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)
