» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுவர்கள் ஓட்டி வந்த 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:47:03 AM (IST)

குமரி மாவட்டத்தில் 18 வயது குறைவான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் அருள்சேகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் இராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, அஞ்சுகிராமம் கன்னியாகுமரி பகுதியில் வாகன தணிக்கையின் போது 18 வயது குறைவாக வாகனம் ஓட்டி வந்த 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)
