» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
வெள்ளி 3, அக்டோபர் 2025 5:41:30 PM (IST)

கரூரில் விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அப்போது விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் நீதிபதி கூறியதாவது: விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? தவெக பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இந்த தாமதம்?
விஜயின் பரப்புரை வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்கள்? சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளதுசட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும்: சுப. உதயகுமாரன் வலியுறுத்தல்
வியாழன் 23, அக்டோபர் 2025 11:53:33 AM (IST)

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)

கரூர் சம்பவத்தின் துயரத்தால் நான் அழுதேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
வியாழன் 23, அக்டோபர் 2025 10:29:45 AM (IST)

சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை தலைவர்
வியாழன் 23, அக்டோபர் 2025 10:14:26 AM (IST)

ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் தற்காலிக சீரமைப்பு பணி: போக்குவரத்து சீரானது!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:32:46 AM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 22, அக்டோபர் 2025 3:53:56 PM (IST)




