» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

திங்கள் 27, அக்டோபர் 2025 4:59:11 PM (IST)

தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை (வண்டி எண்: 20681/20682) செல்லும் சிலம்பு அதிவேக எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.

தாம்பரம் - நாகர்கோவில் (வண்டி எண்: 22657/22658) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 2ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் (வண்டி எண்: 12695/12696) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 3ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 4 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.

சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (வண்டி எண்: 22639/22640) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 27 வரையிலும், ஆலப்புழாவில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 28 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.

கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 16618/16617) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 5 முதல் ஏப்ரல் 29 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.

கூடுதல் பெட்டிகளின் அமைப்பு: 1 - ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 2 - ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி, 3 - ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 1 - பொது வகுப்பு பெட்டி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory