» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:59:11 PM (IST)
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை (வண்டி எண்: 20681/20682) செல்லும் சிலம்பு அதிவேக எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
தாம்பரம் - நாகர்கோவில் (வண்டி எண்: 22657/22658) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 2ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் (வண்டி எண்: 12695/12696) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 3ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 4 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (வண்டி எண்: 22639/22640) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 27 வரையிலும், ஆலப்புழாவில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 28 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 16618/16617) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 5 முதல் ஏப்ரல் 29 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
கூடுதல் பெட்டிகளின் அமைப்பு: 1 - ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 2 - ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி, 3 - ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 1 - பொது வகுப்பு பெட்டி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதியில் அரசு கலை கல்லூரி : தமிழக முதல்வருக்கு மாணவர் சங்கம் கோரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 5:28:30 PM (IST)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:38:41 PM (IST)

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திங்கள் 27, அக்டோபர் 2025 12:04:26 PM (IST)

மோந்தா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:47:26 AM (IST)

வாக்காளர் பட்டியலை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
திங்கள் 27, அக்டோபர் 2025 11:34:07 AM (IST)

கரூர் துயர சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விஜய் ஆறுதல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:24:11 AM (IST)




