» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப் புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
 அதன்பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப் இன்ஸ்பெக்டர் மகேந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரணை நடத்தி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட காட்டாக்கடை பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் மகன் பிஜோய்(20) மற்றும் மூன்று 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிரார்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் : பள்ளி செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:44:27 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)

பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்புமிக்க மரம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:06:56 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST)

பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:50:13 PM (IST)




