» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி குடியிருப்பில் உதவிப் பேராசிரியை வீட்டிலிருந்து 57 பவுன் தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
கோயம்புத்தூா் மாவட்டம், தெற்கு பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாச ராமானுஜம். இவரது மனைவி ஆக்சிடி எஸ். தா்ஷினி (41). இவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருவதால், மருத்துவக் கல்லூரி குடியிருப்பில் தங்கியுள்ளாா். அக். 30ஆம் தேதி தா்ஷினி சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டுக் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கிடப்பதை வீட்டின் மாடியில் வசிக்கும் மற்றொரு பேராசிரியா் கவனித்து தா்ஷினியிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, ஆக்சிடி எஸ். தா்ஷினி வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு 57 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில், அவா் புகாரளித்ததைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா். மேலும், குடியிருப்பு பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 5, நவம்பர் 2025 4:08:28 PM (IST)

கருணாநிதி கைதானபோது நீங்கள் ஓடியது தெரியாதா? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
புதன் 5, நவம்பர் 2025 4:00:41 PM (IST)

தமிழகம், கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடக்கலையா? ராகுலுக்கு கிரண் ரிஜிஜு கேள்வி
புதன் 5, நவம்பர் 2025 3:47:46 PM (IST)

2026 தேர்தலில் 100 சதவீத வெற்றி நிச்சயம்: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேச்சு
புதன் 5, நவம்பர் 2025 3:36:26 PM (IST)

தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!
புதன் 5, நவம்பர் 2025 12:49:22 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)




