» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருதை கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் பூஜிதகுரு பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்.
சாமிதோப்பு அன்புவனத்தில் வைகுண்டரும், வாழ்வியலும் என்ற புத்தக வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விருது வழங்கும் நிகழ்வும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மகாகுரு பால பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். கவிஞர் முத்துலிங்கம் இறைவணக்கம் பாடினார் தமிழ்நாடு கலை இலக்கிய கழகச் செயலர் முனைவர் முகிலை பாஸ்ரீ வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் தமிழன் இளங்கோ, பேராசிரியர் அப்துல் சமது, தமிழ்ச்சோலை அமைப்பின் தலைவர் பேராசிரியர் சுந்தரலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். பால பிரஜாபதி அடிகளார் வெளியிட்ட வைகுண்டரும், வாழ்வியலும் என்னும் புத்தகத்தை திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் ஓம் முத்தையா பெற்றுக் கொண்டார். அதன்பின் ஆன்மிகச் சுடர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய கழகத் தலைவர் ஈஸ்வரன், நாஞ்சில் கலையகம் மயூரி சீதாராமன், முனைவர் செல்வராஜன், ஈஸ்வரன், பேராசிரியர் ஸ்ரீமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை கவிதாயினி விஜி பூரண்சிங் தொகுத்து வழங்கினார். அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ம் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:31:11 PM (IST)

சுபமுகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் நவ.27ம் தேதி கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:17:58 PM (IST)

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:13:27 PM (IST)

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:52:31 PM (IST)

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:40:12 AM (IST)

கரூர் துயர சம்பவம்: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:07:23 AM (IST)




