» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!

புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்கழி மாதம் டிச. 16இல் தொடங்கி ஜன. 14இல் நிறைவடைகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 3.30-க்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 - 5 மணிக்குள் உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 - 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 - 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை நடைபெறும்

பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று நடை திருக்காப்பிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு

ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன. 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன. 3ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும் நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடைபெறும். பிரதோஷமான டிச. 17, ஜன. 1 ஆகிய 2 நாள்கள் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory