» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தித்வா புயலால் நீரோட்ட மாறுபாடு எதிரொலி: தனுஷ்கோடி கடலில் புதிய மணல் திட்டு!

வெள்ளி 26, டிசம்பர் 2025 8:39:32 AM (IST)



தித்வா புயலால் கடல் நீரோட்ட மாறுபாட்டினால் தனுஷ்கோடி கடலில் புதிய மணல் திட்டு உருவாகியுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளது. நாட்டின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் 6-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லைப்பகுதி முடிகின்றது. வங்கக்கடல் பகுதியில் கடந்த மாதம் ‘தித்வா’ புயல் உருவானது. இந்த புயல் காரணமாக ராமேசுவரம் பகுதியில் 5 நாட்கள் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

சில நாட்கள் கழித்து தித்வா புயலால் தனுஷ்கோடி கடல் பகுதியில் புதிதாக மணல் திட்டு ஒன்று உருவாகி உள்ளது. அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து பார்த்தாலே புதிதாக உருவான மணல் திட்டு தெளிவாக தெரிகின்றது. மிகவும் சிறிதாக இருந்த இந்த மணல் திட்டு தற்போது ஏற்பட்டு உள்ள கடல் நீரோட்ட மாறுபாடு காரணமாக பெரிய மணல் திட்டாக காட்சியளிக்கின்றது.

புதிதாக உருவான மணல் திட்டில் ஏராளமான கடல் காவா என்று அழைக்கப்படும் கடல் புறாக்கள் குவிந்து முகாமிட்டு உள்ளன. அவை அங்கு இருந்து இரை தேடுகின்றன. ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று கடலின் நடுவே புதிதாக உருவாகியுள்ள இந்த மணல் திட்டை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory