» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்

திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

நண்பரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஐடிஐ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், செண்பகராமன்புதூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). ஐடிஐ மாணவரான இவர், நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார், வசந்தகுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது: வசந்தகுமாரின் நெருங்கிய நண்பரான முத்து கிஷோர், கடந்த 3-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். உயிர்த்தோழனின் மறைவால் வசந்தகுமார் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நண்பன் இல்லாத துக்கத்தில் மனவேதனை அடைந்த வசந்தகுமார், நேற்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரு நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory