» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:19:26 AM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவைச் சேர்ந்த ஜான்சன் (52) என்பவர், நேற்று மதியம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார்.
மறைந்த ஜான்சனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜான்சன் திருவுருவப் படத்திற்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், மீன்பிடி தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்: ரூ.80 லட்சத்தில் சுற்றுவேலி அமைக்கும் பணி தொடக்கம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 8:05:06 PM (IST)

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:45:53 PM (IST)

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 4:09:32 PM (IST)

தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் காலவரையற்ற மூடல்: ஊழியர்கள் முடிவு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:18:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் பொறுப்பேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:57:08 PM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட நடவடிக்கை : தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் கோரிக்கை!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:43:37 AM (IST)

