» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

குளச்சல் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உடையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ் ராஜன் (24). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் விஜி (23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இவர்களது வாகனம் லட்சுமிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஜஸ்டின் ராஜ் (36) உட்பட மூன்று பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதில் நிதிஷ் ராஜன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த விஜி மற்றும் ஜஸ்டின் ராஜ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் காவல்துறையினர், உயிரிழந்த நிதிஷ் ராஜனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory