» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

ஆரல்வாய்மொழி பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத்துறையினர் பொய்கைக் காட்டுப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) ஆகிய இருவரும் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்த வனத்துறையினர், அவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முனைவர் அ. அன்பு அவர்களின் உத்தரவின்படி, பிடிபட்ட இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக இருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரையும் வனத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் சிறையில் அடைத்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதி தனியார் வங்கித் துணை மேலாளர் பலி: தூத்துக்குடி அருகே சோகம்!
புதன் 25, மார்ச் 2026 8:08:41 PM (IST)

டார்ச் லைட் சின்னத்திலேயே மநீம போட்டியிட அனுமதி: முதல்வருக்கு திருமா கோரிக்கை!
புதன் 25, மார்ச் 2026 5:34:24 PM (IST)

திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் விஜய் படங்களுக்கு தடை: தேர்தல் ஆணையத்தில் மனு!
புதன் 25, மார்ச் 2026 5:12:30 PM (IST)

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு: தாங்க முடியாத துயரத்தில் தாய் தற்கொலை!
புதன் 25, மார்ச் 2026 5:08:57 PM (IST)

தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 25, மார்ச் 2026 4:16:52 PM (IST)

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு: கூட்டணிக் கட்சிகள் தொகுதிகள் முழு விவரம்!
புதன் 25, மார்ச் 2026 3:52:25 PM (IST)

