» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:19:58 PM (IST)

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரையில் கூடுவார்கள்.

இந்த நிலையில், கள்ளழகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 30-ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும், மே 1-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக, வெள்ளிக்கிழமை(ஏப். 24) முதல் 6 நாள்களுக்கு வைகை அணையிருந்து 500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory