» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே உக்கிரமாகும்..!

திங்கள் 27, ஏப்ரல் 2026 9:14:35 AM (IST)

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவுவதால், இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பம் 105 டிகிரியைத் தாண்டிப் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) வரை வெப்பம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், 30-ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் குடை மற்றும் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோடை மழை: வரும் 28-ஆம் தேதிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கோடை மழை தொடங்க வாய்ப்புள்ளது. மே 1 முதல் 10-ஆம் தேதிக்குள் உள் மாவட்டங்களில் மழை தீவிரம் அடையக்கூடும்.

கத்திரி வெயில்: கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) மே மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

தென்மேற்கு பருவமழை: வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்னதாகவே மே 22 முதல் 24-ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் எல்-நினோ தாக்கம்: பசிபிக் பெருங்கடலில் அக்டோபர் மாதம் உருவாகவுள்ள 'சூப்பர் எல்-நினோ' காரணமாக, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் எனவும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலமே நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory