» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)



மே 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சி நடைபெறப்போகிறது. தவெக அரியணையில் அமரும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பழனியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன், "நாளைய தமிழகத்தை ஆளப்போகும் தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இன்று ஒரு சிறந்த நாள். மக்கள் அனைவரும் ஒருமனதாக விஜய்யை தேர்வு செய்வார்கள். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். 

மே 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சி நடைபெறப்போகிறது. தவெக அரியணையில் அமரும். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும். வாக்குகளைப் பிரித்தாலும் ஆட்சியமைக்க முடியாது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வெறும் அல்வா பேச்சுகளாகவே முடியும்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory