» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:01:49 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசன மற்றும் சேவைக் கட்டண உயர்வு குறித்துப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கடைசி நாளை ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த பா. இராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: "இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனக் கட்டணம், பூஜைக் கட்டணம் மற்றும் சிறப்புப் பூஜைகள் கட்டண உயர்வு குறித்துத் தக்கார் அல்லது அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உட்படப் பல கோயில்களில் இந்த அறிவிப்பு பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை. இதனால் கட்டண உயர்வு விபரம் பக்தர்களுக்குத் தெரிவதில்லை.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் திருச்செந்தூர் கோயிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்படாத சூழ்நிலையில், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில், பரவலாக பக்தர்களுக்குத் தெரிவிக்காமல் கடந்த ஜூன் 20 அன்று எவ்வித கையெழுத்தும் இன்றி கோயில் அறிவிப்புப் பலகையில் மட்டும் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. எனவே, முறையான அறங்காவலர் குழு தீர்மானம் இல்லாமல் வெளியிடப்பட்ட இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பு செல்லாது என உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இது குறித்து ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், "கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை; கருத்துதான் கேட்கிறோம்" என்று பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இராம்குமார் ஆதித்தன் ஜூன் 25 அன்று வழங்கிய ஆட்சேபனை 27-ஆம் தேதி கிடைக்கப் பெற்றதாகவும், அவர் 28-ஆம் தேதியே வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு தொடர்பான விளம்பரத்தை இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இக்கட்டண உயர்வு குறித்துப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 7 என இருந்ததை, வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்: தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
திங்கள் 6, ஜூலை 2026 4:44:03 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
திங்கள் 6, ஜூலை 2026 3:30:41 PM (IST)


