» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி புதிய சார் ஆட்சியராக விவேக் யாதவ் நியமனம்: தலைமைச் செயலாளர் உத்தரவு!

செவ்வாய் 7, ஜூலை 2026 11:01:06 AM (IST)

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சார் ஆட்சியராக  விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பியுள்ள 14 இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உதவி ஆட்சியர்களாகப் புதிய பணியிடங்களை வழங்கி அரசுத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சேலம் மாவட்டப் பயிற்சி ஆட்சியர் விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் தூத்துக்குடி கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டப் பயிற்சி ஆட்சியர் டி. புவனேஷ்ராம் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory