» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி: ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

வியாழன் 16, ஜூலை 2026 11:15:38 AM (IST)

கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) பணியிடத்திற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடம் மாத தொகுப்பூதியம் 18,000 ரூபாய் வீதம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுடைய நபர்கள் ஜூலை 16 முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை எழுத்துப்பூர்வமாக நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் (3 பிரதிகளில்) சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory