» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீரோவின் ஆட்சி போல் தவெக அரசு செயல்படுகிறது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:39:43 PM (IST)

நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன என்று தமிழக ஆட்சியாளர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வெளியான செய்தி தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயதுப் பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை இன்றைய அரசு எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்தச் செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்துக் கால் விரலை இழந்துள்ள அந்தப் பெண்ணிற்கு இந்த அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "மக்கள் இப்படித் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ திரைப்படம் பார்த்துக் கொண்டாடிச் சுயபடம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், இன்று முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க விடுமுறை எடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன என்று கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசிற்கு எனது கடும் கண்டனம். உடனடியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை!
வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நிதி மடைமாற்றம்: டிடிவி தினகரன் கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 5:13:34 PM (IST)

காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை – சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 3:43:18 PM (IST)

தூத்துக்குடி காவல் மரணம்: அரசே இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது – கனிமொழி எம்பி கண்டனம்
வியாழன் 23, ஜூலை 2026 3:34:10 PM (IST)

கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தடியடி நடத்தினால் நாடு தோற்றதாக அர்த்தம்: கமல்ஹாசன் காட்டம்!
வியாழன் 23, ஜூலை 2026 12:30:04 PM (IST)

தொல்காப்பியம் முழுவதையும் 22 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை: மாணவிக்கு த.வெ.க பாராட்டு
வியாழன் 23, ஜூலை 2026 10:13:09 AM (IST)


