» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை மேயர் பிரியாவுக்கு மர்ம நபர் தொல்லை: காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

திங்கள் 27, ஜூலை 2026 4:23:21 PM (IST)

சமூக வலைத்தளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர் தொல்லை தருவதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

வேப்பேரியில் உள்ள சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்திற்கு நேரில் சென்ற மேயர் பிரியா, காவல் ஆணையர் அமல் ராஜைச் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து தனக்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன் குறித்துப் அவதூறாகச் சித்தரித்துத் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத் தொலைபேசி எண்ணிற்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து அழைத்துப் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, இதில் தொடர்புடைய அடையாளம் தெரியாத நபர்கள் மீது உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது புகாரில் மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.

மேயர் பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மேயரே நேரில் சென்று தொல்லை தருவதாகப் புகார் அளித்துள்ள சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory