» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

செவ்வாய் 28, ஜூலை 2026 4:10:56 PM (IST)

UdhayanithiCmvijay.jpg

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை முதல்வர் அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது: "மேக்கேதாட்டு அணை கட்டத் தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகத்திற்குத் தேவை இல்லை என ஒன்றிய இணை அமைச்சர் அளித்த பதில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெருமளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளக் காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும் தமிழ்நாட்டின் உரிமைகளை முதல்வர் அடகு வைத்துள்ளார்.

இப்பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒன்றிய அரசிடம் மேக்கேதாட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலேயே நான் பேசியிருந்தேன். ஆனால் கர்நாடகத்தில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தில், இந்த 'சோஃபா மாடல்' முதல்வர் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை."

இனியும் இப்பிரச்சனையில் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் அபாயம் உள்ளது என்றும், எனவே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க முதல்வர் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory