» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 15 முதல் தினசரி குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:25:34 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர், "பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!
வியாழன் 30, ஜூலை 2026 10:12:24 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: மாற்று இடம், நிதியுதவி அறிவித்து கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை!
வியாழன் 30, ஜூலை 2026 7:50:34 AM (IST)

வேளாங்கண்ணி திருவிழா: நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 29, ஜூலை 2026 5:41:23 PM (IST)

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி : முதலமைச்சரிடம் அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை!
புதன் 29, ஜூலை 2026 5:10:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலைய பணிகள்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
புதன் 29, ஜூலை 2026 4:12:41 PM (IST)

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்? - தமிழ்நாடு அரசு பரிசீலனை!
புதன் 29, ஜூலை 2026 4:02:08 PM (IST)


