» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 6-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:02:10 AM (IST)

கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத்தின் 343-வது ஆண்டு விண்ணேற்பு பெருவிழா வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இது குறித்துப் பாளையங்கோட்டை மறைமாவட்ட நிர்வாகி மோட்சராஜன் காமநாயக்கன்பட்டி ஆலயத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6:30 மணியளவில் திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனை நிகழ்வுகள் நடைபெறும்.

ஆகஸ்ட் 9 (காலை 8:30 மணி) தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி மற்றும் புதுநன்மை விழா நடைபெறும். ஆகஸ்ட் 14 (மாலை 6:00 மணி) ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். ஆகஸ்ட் 15 (அதிகாலை 2:00 மணி) மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் தேரடி ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். 

ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 6:00 மணி மற்றும் 8:00 மணிக்குத் திருப்பலிகள் நடைபெறும்.  தொடர்ந்து வெளிமாநில பக்தர்களின் வசதிக்காக மதியம் 12:00 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, பிற்பகல் 2:00 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, மாலை 4:00 மணிக்கு இந்தியில் திருப்பலி இரவு 7:00 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெறும் 

விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் பெரிய பந்தல் அமைத்துத் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பேராலயம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கப் பட்டுள்ளது. பேட்டியின் போது பேராலய பங்குத்தந்தை மோயீசன், உதவி பங்குத்தந்தை மரிய ஜோமிக்ஸ், ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பேராலய நிர்வாகம் மற்றும் சுற்றுவட்டார கிராம இறைமக்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory