» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேரன், பேத்தி பேச்சைக் கேட்டு ஓட்டுபோட்டவர்கள் வேதனையில் இருக்கிறார்கள் : ஓபிஎஸ் விமர்சனம்

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:01:40 AM (IST)

பேரன், பேத்தி பேச்சைக் கேட்டு ஓட்டு போட்ட மக்கள் வேதனையில் இருப்பதாக த.வெ.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து பேசினார்.

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் ஒரு தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். இதில், முன்னாள் முதல்-அமைச்சரும், போடி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் முடிவை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பேரன், பேத்திகளின் பேச்சைக் கேட்டு த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டு விட்டனர். ஓட்டுபோட்ட மக்கள் இப்போது வேதனையில் இருக்கிறார்கள்.

காவிரி நதிநீர் உள்பட தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. தான். நான் ஒரு கட்சியின் உயர் பதவிகளில் இருந்தேன். முதல்-அமைச்சராக இருந்தேன். தமிழகத்தின் உரிமைகளுக்காக துணை நிற்கும் இயக்கம் தி.மு.க. என்பதால் நான் தி.மு.க.வில் இணைந்தேன்.

சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டால் உடனே பதில் அளிக்கும் இடத்தில் தான் நாங்கள் இருந்தோம். ஆனால், இப்போதைய முதல்-அமைச்சர் எந்த கேள்வி கேட்டாலும் அமைதியாக இருக்கிறார். அதை பார்க்கும் போது எனக்கு கவுண்டமணி, செந்திலின் ஒரு காமெடி காட்சி தான் நினைவுக்கு வருகிறது. ஒரு மாயையை உருவாக்கி விஜய் ஆட்சிக்கு வந்து விட்டார்.

தமிழகத்தில் அடுத்து தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மக்களும் அதை தான் விரும்புகிறார்கள். எனவே, தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கான வேலைகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணையப் போவதாக பல்வேறு கருத்துகள் பரவி வந்தன. அவை வதந்தி என்றும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு இருந்ததாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory