» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள தண்டவாளப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அவ்வழியாக இயங்கும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படவுள்ளதாகத் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் (16321):

வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 8:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகரில் இருந்து திண்டுக்கல் வழியே செல்லாமல் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாகக் கரூர் சென்றடைந்து, பின்னர் கோவைக்கு இயங்கும். அன்றைய தினம் இர்ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய நிலையங்கள் வழியாகச் செல்லாது.

நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (16352):

வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி காலை 6:15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாகத் திருச்சி சென்று மும்பைக்கு இயங்கும். அன்றைய தினம் இர்ரயில் திண்டுக்கல் வழியாகச் செல்லாது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory