» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் தனியார் உணவகத்திற்கு ரூ.50,000 அபராதம் - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!

புதன் 19, ஆகஸ்ட் 2026 4:34:18 PM (IST)

DrainageHotel.jpg

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூர்வாரப்பட்ட பிரதான மழைநீர் வடிகாலில், உணவு மற்றும் சமையல் கழிவுகளை நேரடியாகக் கலந்த தனியார் உணவகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 50,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் மற்றும் பிரதான வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் கள ஆய்வின் போது, தனியார் உணவகம் ஒன்று விதிமுறைகளுக்கு மாறாக இயந்திரக் குழியுடன் அமைக்கப்பட்டுள்ள பிரதான மழைநீர் வடிகாலில் தனது சமையல் மற்றும் உணவு கழிவுகளை நேரடியாகக் கலந்தது கண்டறியப்பட்டது.

உணவகத்தின் கழிவுகளால் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கும் சூழல் உருவானது. உடனடியாகத் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 'ஜெட்ராடு' வாகனம் வரவழைக்கப்பட்டு, அடைப்புகள் அகற்றப்பட்டுச் சீரமைக்கப்பட்டது. பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்தத் தனியார் உணவகத்திற்கு ரூபாய் 50,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை:

மாநகரப் பகுதிகளில் இயங்கும் உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், முறையான அனுமதியின்றி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் மற்றும் உணவுக் கழிவுகளை நேரடியாகக் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவெளியில் உணவுக் கழிவுகளைக் கொட்டினாலோ அல்லது பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தினாலோ, பொது சுகாதாரச் சட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புச் சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory