» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

சனி 22, ஆகஸ்ட் 2026 10:25:05 AM (IST)

pallikalvi.jpg

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்துத் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 31,336 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இதில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.95 லட்சம் குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவடையவிருந்த நிலையில், எந்தவொரு குழந்தையும் கல்வி வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சேர்க்கைக் காலத்தைச் நீட்டிக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, தகுதியுள்ள குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory