» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)
ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்து அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தோவாளை பூச்சந்தைக்குக் குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவில் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. ஓணம் பூக்கோலங்களுக்காகக் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரளாக வந்து பூக்களைப் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
தேவை அதிகரிப்பு காரணமாக தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பிச்சிப் பூ கிலோ ரூ. 750-லிருந்து ரூ. 500 உயர்ந்து, தற்சமயம் ரூ. 1,250-க்கு விற்பனையாகிறது. முல்லைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 450 உயர்ந்து, ரூ. 1,150-க்கு விற்பனையாகிறது. மல்லிகைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 200 உயர்ந்து, ரூ. 900-க்கு விற்பனையாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விக்சித் பாரத் 2047: கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உருவாக்கிய கல்விக்கொடி & லோகோ!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:03:37 PM (IST)

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:43:30 PM (IST)

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:25:05 AM (IST)


