» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி முகூர்த்தத் திருமணங்கள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:58:30 AM (IST)

tiruchendurkoivl.jpg

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சுபமுகூர்த்த தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

ஆவணி வளர்பிறை முகூர்த்தத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கோயில் நடை அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் சிறப்புடன் நடைபெற்றன.

அதிகாலை முதலே கடலிலும், நாழிக் கிணற்றிலும் புனித நீராடிய பக்தர்கள், இலவச பொதுத் தரிசனம், ரூ. 100 கட்டணத் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழித்தடம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த நாளையொட்டி, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான மணமக்கள் ஜோடிகளுக்குக் கோயிலின் சண்முக விலாச மண்டபத்தில் திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றன.

இதன் காரணமாகக் கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் பக்தர்கள் மற்றும் உறவினர்களின் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.

திருமண விழா மற்றும் சாமி தரிசனத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஆ. அருணாசலம், துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory